Wednesday, February 23, 2011

பூ வைத்து விடு

உந்தன் நிழல் படாமலே
உந்தன் அன்பால் என் தாயான
என் தாயானவனே ...என்னை
பொறுத்தவரை நீ அதிசய
பிறவியடா நிஜங்கள்
இல்லாமலே என்னை
ஆட்சி செய்ததால் ...... 

நாம வணங்கும் சாமிய
நாங்கள் பார்ப்பதில்லை
நீயும் எனக்கு கடவுள்
தானடா என்னை நெருங்காமலே
இருப்பதால் என்னவனே....

இறுதி வரை உனக்கு
பாத பூஜை செய்ய
காத்திருக்கும் உன்
பக்தை நானடா .நான்
இறந்து போனாலும் உன்
பிள்ளையாய் பிறந்தேனும்
உன்னை வணங்கிடுவேன் ... 

நான் இறந்தால் உன்
பிள்ளையை கொண்டாவது
என் சமாதிக்கு பூ வைத்து
விடு என்னவனே .....

No comments:

Post a Comment