Tuesday, February 15, 2011

நேசிப்பேனடா...

 நீயே தன் உலகம் என்று எண்ணி
எண்ணி வாழும் பெண்ணை
தினம் தினம் வார்த்தைகளால்
நோகடிக்கிறாயே எதுக்கு
அவளை சாகடிக்கவா .......

எனக்குள் நீ நினைவுகளாய்
தொடர்ந்தாலும் என்னோடு
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
நீ இல்லாத என் நிஜங்கள்
என்றும் பாலைவனம் தான் ......... 

நீ என் தாயானவன் உன்னை
நேசிக்கும் சேயடா நான்
என்னோடு நீ இருந்திருந்தால்
உன்னோடு நான் தினமும்
கொஞ்சி விளையாடி இருப்பேனடா ...

என்னதான் நான் உன்னை
சுற்றி சுற்றி வந்தாலும் ஒரே
ஒரு நொடியில் உன் வார்த்தைகளால்
கசக்கி எறிந்து விட்டு போகிறாயே ....
அந்த ரணதோடும் நான் உன்னையே
நேசிப்பேனடா................m.j.gowsi

No comments:

Post a Comment