Tuesday, February 15, 2011

எழுத்து.காம்

 எனக்குத் தெரியும் அவளை......!!!! 

                          

எனக்குத் தெரியும்
அவளை
யாருடனோ கூசியபடி செல்கிறாளே
அவளைத்தான் 

ஒற்றை ரோஜா சூடியிருக்கிறாள்
ஆனால் அவளுக்கு மல்லிகைதான் பிடிக்கும்
எனக்குத் தெரியும் அவளை 

புடவைதான் அவளுக்கு பிடிக்கும்
ஆனால் சுடிதார் அணிந்திருக்கிறாள்
எனக்குத் தெரியும் அவளை

எதையாவது பேசியபடிதான் நடப்பாள்
ஆனால் இன்று மௌனமாய் நடக்கிறாள்
அவனுடன்
எனக்குத் தெரியும் அவளை 

                                            
அவன் கட்டிய தாலி என்பதால்தான்
கூசி நடக்கிறாள்
எனக்குத் தெரியும் அவளை

அவளுக்குத் தெரியும் என்னை
அவளைப் பிரிந்தால் நான்
இறந்துவிடுவேன் என
எனக்கும் தெரியும் அவளை
என்னை பிரிந்தால் அவளும்
இறந்துவிடுவாலென
இது அவனுக்குத் தெரியாது.......
.!!!!!!!

No comments:

Post a Comment