Monday, March 21, 2011
காதலின் வலி உணராதவள்.......
அன்பே கலங்காதே
உன் கண்ணீர் துளிகளால்
என்னை வதைக்காதே
உன் பெற்றோரின்
கவுரவத்திர்க்காக தானே
என்னை அன்று விட்டு சென்றாய்
இப்போது ஏன் திரும்பி
வந்தாய் உன் பெற்றோரின் கவுரவம்
இப்போது உன் கண்களுக்கு தெரிய வில்லையா
தயவு செய்து போய்விடு
அன்று நீ என்னை பிரிந்த போது
நான் தவித்த தவிப்பு உனக்கு தெரியாமலே
போனது
பிரிவின்
தவிப்பை உணர்ந்தவன் நான்
இன்று உன் பெற்றோரை பிரிந்து
அவர்களையும் என்னை போல் தவிக்க
வைக்காதே உன் பெற்றோரிடமே
சென்று விடு..................
நீ காதலின் வலி உணராதவள்..........
Subscribe to:
Posts (Atom)